மக்களின் சொத்து, இஸ்லாமியர்கள் குறித்த பிரதமர் மோடியின் பேச்சு : காங்கிரஸ் கடும் கண்டனம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் அதிக குழந்தைகள் உள்ள இஸ்லாமியர்களுக்கு நாட்டின் சொத்தை பகிர்ந்தளித்து விடுவார்கள் என பிரதமர் மோடி பேசியிருப்பது எதிர் கட்சிகளிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. ராஜஸ்தானின் பன்ஸ்வாராவில் நடைபெற்ற பேரணியில் இஸ்லாமியர்கள் மீது வெறுப்பை உமிழும் வகையில் பிரதமர் மோடி பேசியிருப்பதற்கு பல்வேறு கட்சி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பிரதமரின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ள காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, பல்வேறு பிரச்னைகளில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்ப பிரதமர் முயற்சிப்பதாக குற்றம்சாட்டினார். மேலும், வாக்குகளைப் பெறுவதற்காக பிரதமர் மோடி இஸ்லாமியர்களை 'துஷ்பிரயோகம்' செய்வதாக ஏஐஎம்ஐஎம் கட்சி தலைவர் அசாதுதீன் ஒவைசி குற்றம் சாட்டியுள்ளார். 

Night
Day