மகாராஷ்டிரா: பாஜக, உத்தவ் தாக்கரே சிவசேனா ஆதரவாளர்கள் இடையே மோதல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மகாராஷ்டிரா மாநிலம் சிப்ளூனில் உத்தவ் தாக்கரே தரப்பு சிவசேனா ஆதரவாளர்களும், பாஜக ஆதரவாளர்களும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ரத்னகிரி மாவட்டத்தில் நடைபெற்ற பொது நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக முன்னாள் பாஜக எம்பி நிலேஷ் ரானே தனது காரில் சென்றுள்ளார். அப்போது, அடையாளம் தெரியாத மர்மநபர்கள் சிலர் நிலேஷ் ரானேவின் கார் மீது கற்களை வீசியதால், உத்தவ் தாக்கரே தரப்பு சிவசேனாவிற்கும், பாஜக ஆதரவாளர்களுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் தாக்குதலில் ஈடுபட்டவர்களை தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். 

Night
Day