புதுச்சேரியில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி சுவிகி ஊழியர் பலி - உறவினர்கள் சாலைமறியல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

புதுச்சேரியில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி உயிரிழந்த சுவிகி உணவு டெலிவரி செய்யும் ஊழியரின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் மற்றும் சுவிகி ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கோட்டக்குப்பத்தை சேர்ந்த இஸ்மாயில் சுவிகி நிறுவனத்தில் உணவு டெலிவரி செய்யும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில் இரவு உணவு டெலிவரி செய்ய சென்றபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதி படுகாயமடைந்த இஸ்மாயில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில், விபத்தை ஏற்படுத்திய வாகனத்தின் உரிமையாளரை கைது செய்யும் வரை இஸ்மாயிலின் உடலை வாங்க மாட்டோம் என கூறி அவரது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

Night
Day