புதிய தேர்தல் ஆணையர்கள் பதவியேற்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தின் தேர்தல் ஆணையர்களாக ஞானேஷ்குமார் மற்றும் சுக்பீர் சிங் சாந்து ஆகியோர் பொறுப்பேற்றுக்கொண்டனர்.

இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் இரு தேர்தல் ஆணையர் பதவிகள் காலியிடமாக இருந்த நிலையில், பிரதமர் மோடி தலைமையிலான தேர்வு குழு கூடி, புதிய தேர்தல் ஆணையர்களை தேர்வு செய்தது. இரு ஆணையர்கள் தேர்வுக்கு குடியரசு தலைவர் திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்த நிலையில் அரசிதழிலும் வெளியிடப்பட்டது. இதையடுத்து இன்று காலை தலைமை தேர்தல் ஆணைய அலுவலகத்தில் தேர்தல் ஆணையர்களாக நியமிக்கப்பட்ட ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரிகளான ஞானேஷ்குமார் மற்றும் சுக்பீர் சிங் சாந்து ஆகியோர் பொறுப்பேற்றுக் கொண்டனர். முன்னதாக தேர்தல் ஆணையர்களாக பொறுப்பேற்க வந்த இருவரையும் தலைமை தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார் வரவேற்றார். இரு ஆணையர்களும் பொறுப்பேற்றுள்ள நிலையில் இன்றோ அல்லது நாளையோ மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

varient
Night
Day