நாகை மீனவர்கள் 15 பேர் சிறைபிடிப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக்கூறி நாகை மீனவர்கள் 15 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்ததுடன் படகையும் பறிமுதல் செய்தனர். நாகை மீன்பிடி துறைமுகத்திலிருந்து 15 மீனவர்கள் இலங்கை காரைநகர் கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக்கூறி 15 மீனவர்களை கைது செய்தனர். மேலும், விசைப்படகையும் பறிமுதல் செய்து காங்கேசன்துறை கடற்கரை முகாமிற்கு கொண்டு சென்றனர். இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் மீனவ கிராமங்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. கைது செய்யப்பட்ட மீனவர்களையும் படகையும் மீட்டு தர வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Night
Day