பிரபல சட்ட வல்லுனர் பாலி நரிமன் உடலுக்கு இன்று இறுதிச்சடங்கு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

உடல் நலக்குறைவால் காலமான உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் ஃபாலி எஸ்.நரிமனின் இறுதிச்சடங்கு டெல்லியில் உள்ள பார்சி அரம்காவில் இன்று காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. உச்சநீதிமன்றத்தின் மிகப் பிரபலமான வழக்கறிஞர்களில் ஒருவரும், முன்னாள் கூடுதல் சொலிசிடர் ஜெனரலுமான ஃபாலி எஸ்.நரிமன் நேற்று காலமானார். அவருக்கு வயது 95. மாநிலங்களவை உறுப்பினராக பதவி வகித்துள்ள நரிமன், பத்ம பூஷண், பத்ம விபூஷண் விருதுகளையும் பெற்றுள்ளார். அவரது மறைவிற்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திர சூட் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். நாரிமனின் மகன் ரோஹின்டன் உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Night
Day