இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் நாளை சென்னை வருகை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழ்நாட்டில் மக்களவைத் தோ்தல் தொடா்பான இறுதி கட்ட ஏற்பாடுகளை ஆய்வு செய்வதற்காக இந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் ராஜீவ்குமார் தலைமையிலான குழு நாளை சென்னை வருகிறது. மக்களவைத் தோ்தல் அட்டவணை அடுத்த மாதம் வெளியிடப்பட உள்ளதாக கூறப்படுகிறது. அதற்கு முன்பாக, தோ்தலுக்கான ஏற்பாடுகளை மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ளதா என தலைமைத் தோ்தல் ஆணையம் நேரில் ஆய்வு செய்து வருகிறது. அந்த வகையில், தமிழகத்திலும் நாளை மற்றும் நாளை மறுநாள் என இரு நாட்கள் தலைமைத் தோ்தல் ஆணையம் ஆலோசனை நடத்த உள்ளது. இதில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், தலைமைச் செயலாளர், டிஜிபி,  மாவட்ட ஆட்சியா்கள், காவல் கண்காணிப்பாளா்கள் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.

Night
Day