பிரதமர் இன்று காஷ்மீர் பயணம் - உச்சக்கட்ட பாதுகாப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பல்வேறு திட்டப் பணிகளை தொடங்கி வைக்க பிரதமர் நரேந்திர மோடி இன்று ஜம்மு காஷ்மீர் செல்வதையொட்டி அங்கு உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. காஷ்மீரில் எய்ம்ஸ் மருத்துவமனை மற்றும் ஜம்முவில் உள்ள சேனாப் ஆற்றின் மேலே கட்டப்பட்டுள்ள உலகின் மிக உயரமான ரயில்வே பாலத்தையும் பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார். அதனைத் தொடர்ந்து ஜம்முவில் மௌலானா ஆசாத் மைதானத்தில் நடைபெறும் பேரணியில் பொதுமக்கள் மத்தியில் உரையாற்றுகிறார். இந்நிலையில், காஷ்மீரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ஸ்ரீநகர் உள்பட பல்வேறு பகுதிகளிலும் வாகன சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. போலீசாரும் துணை நிலை ராணுவமும் குவிக்கப்பட்டுள்ளனர்.

Night
Day