பால் கண்டெய்னர் மீது பேருந்து மோதி விபத்து - 18 பேர் பலி - உயிரிழந்தோர் குடும்பத்துக்கு உ.பி. முதலமைச்சர் இரங்கல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

உத்தரப்பிரதேச மாநிலம் உன்னோவில் பால் கண்டெய்னர் மீது சொகுசுப் பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில் 18 பேர் உயிரிழந்துள்ளனர்.

சீதாமர்ஹியில் இருந்து டெல்லி நோக்கி சென்று கொண்டிருந்த சொகுசுப் பேருந்து, உன்னோவில் உள்ள லக்னோ - ஆக்ரா விரைவுச்சாலையில் பால் கண்டெய்னர் மீது மோதி விபத்துக்குள்ளானது. தகவலறிந்து, சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மீட்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டனர். விபத்தில், 18 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், பலர் படுகாயமடைந்தனர். அவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே, விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்துள்ளார்.

varient
Night
Day