பாகிஸ்தான் ஆக்‍கிரமிப்பு காஷ்மீரை இந்திய அரசு உறுதியாக மீட்கும் - ஜெய்சங்கர் திட்டவட்டம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பாகிஸ்தான் ஆக்‍கிரமிப்பு காஷ்மீரை இந்திய அரசு உறுதியாக மீட்கும் என்று மத்திய வெளியுறவுத்துறை  அமைச்சர் ஜெய்சங்கர் மீண்டும் உறுதிபட தெரிவித்துள்ளார். டெல்லியில் உள்ள கார்கி கல்லுரியில் நடைபெற்ற விழா ஒன்றில் மாணவர்கள் மத்தியில் பேசிய ஜெய்சங்கர், அரசியல் சட்டபிரிவு 370 ஐ ரத்து செய்த விவகாரம் மக்‍கள் மனதில் பல்வேறு சிந்தனைகளை எழுப்பி இருப்பதாகவும், ஆக்‍கிரமிப்பு காஷ்மீர் குறித்தும் மக்‍கள் சிந்தித்து வருவதாகவும் குறிப்பிட்டார். இந்திய அரசு ஆக்‍கிரமிப்பு காஷ்மீரை மீட்க உறுதியாக இருப்பதாகவும், அது இந்திய அரசின் ஒரு பகுதி என்பதால் அதனை இந்தியாவிடம் திருப்பித்தர வேண்டும் எனவும் தெரிவித்தார். 

Night
Day