பதான்கோட்டில் ராணுவ ஹெலிகாப்டர் அவசர, அவரசமாக தரையிறக்கம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பஞ்சாப் மாநிலம் பதான்கோட்டில் ராணுவ ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.

பதான்கோட் மாவட்டத்தில் உள்ள நங்கல்பூர் காவல் நிலைய எல்லைக்குள் வரும் ஹாலெட் கிராமத்தில் இந்திய விமானப்படையின் அப்பாச்சி ஹெலிகாப்டர் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது திடீரென அவசர, அவசரமாக புல்வெளியில் தரையிறக்கப்பட்டது. வழக்கமான பணிகளுக்காக பதான்கோட் விமானப்படை தளத்திலிருந்து அப்பாச்சி ஹெலிகாப்டர் புறப்பட்ட நிலையில், ஹெலிகாப்டர் திடீரென தரையிறக்கப்பட்டது. நடுவானில் பறந்து கொண்டிருந்த ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கப்பட்டதால் ஹெலிகாப்டருக்கு சேதமோ அல்லது அதில் இருந்த  வீரர்களுக்கு காயமோ ஏற்படவில்லை என பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

varient
Night
Day