பஞ்சாப் : ரயில் தண்டவாளத்தில் அமர்ந்து விவசாயிகள் போராட்டம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பஞ்சாப் மாநிலம் ராஜ்புரா ரயில்நிலையத்தில் விவசாயிகள் தண்டவாளத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். வேளாண் விளை பொருட்களுக்கு குறைந்த பட்ச ஆதரவு விலையை நிர்ணயிக்க வலியுறுத்தி டெல்லி எல்லையில் விவசாயிகள் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். அவர்களுக்கு ஆதரவாக இன்று பஞ்சாப் ராஜ்புரா ரயில்நிலையத்துக்கு வந்த விவசாயிகள், தண்டவாளத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, தங்களின் நியாயமான கோரிக்கைகளை மத்திய அரசு விரைந்து நிறைவேற்ற வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். 

Night
Day