பஞ்சாப் : ஆன்லைனில் ஆர்டர் செய்த கேக்கை சாப்பிட்ட 10 வயது சிறுமி உயிரிழப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பஞ்சாபில் ஆன்லைனில் ஆர்டர் செய்த கேக்கை சாப்பிட்டு 10 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பட்டியாலாவில் குடும்பத்துடன் வசித்து வந்த மான்வி என்ற 10 வயது சிறுமி கடந்த 24ம் தேதி தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். ஆன்லைன் மூலம் வாங்கிய கேக்கை குடும்பத்துடன் ஒருவர்கொருவர் ஊட்டிவிட்டு மகிழ்ச்சியுடன் பிறந்தாளை கொண்டாடியுள்ளனர். கேக்கை சாப்பிட்ட பிறகு சிறுமி உட்பட குடும்பத்தினர் வாந்தி எடுத்ததாக கூறப்படுகிறது. இதில், சிறுமியின் உடல்நிலை மோசமானதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக கூறப்படுகிறது. ஆன்லைனின் ஆர்டர் செய்து கேக் கெட்டுப்போய் இருந்ததாக சிறுமியின் பெற்றோர் புகாரளித்துள்ளனர்.

Night
Day