ஜம்மு - ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் நிலச்சரிவு - போக்குவரத்து பாதிப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் மண்சரிவு காரணமாக போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. 


ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மேஹத் மற்றும் கிஷ்த்வாரி பதேரி பகுதியில் திடீரென மண்சரிவு ஏற்பட்டது. இதில், பாறைகள் சரிந்து விழுந்ததால் அப்பகுதியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர். மறுசீரமைப்பு பணிகள் முடியும் வரை இச்சாலையை பயன்படுத்துவதை தவிர்க்குமாறும் பொதுமக்ளை அறிவுறுத்தி உள்ளனர். 

varient
Night
Day