துப்பாக்கிச் சூடு - gangster அன்மோல் பிஷ்னோய் பொறுப்பேற்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நடிகர் சல்மான் கான் வீட்டில் துப்பாக்கி சூடு நடத்தியதற்கு பிரபல ரவுடியின் சகோதரர் பொறுப்பேற்றுள்ளார். மும்பை பாந்த்ரா பகுதியில் வசித்து வரும் நடிகர் சல்மான் வீட்டில், இன்று அதிகாலை ஹெல்மெட் அணிந்த 2 மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதுகுறித்து காவல்துறையினர் மற்றும் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், சிறையில் உள்ள லாரன்ஸ் என்ற ரவுடியின் சகோதரரான அன்மோல் பிஷ்னோய் இச்சம்பவத்திற்கு பொறுப்பேற்றுள்ளார். இது குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்ட அன்மோல், துப்பாக்கிச்சூடு சம்பவம் ட்ரைலர் மட்டுமே என சல்மான் கானிற்கு எச்சரிக்கை விடுத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். இதில் பஞ்சாபி பாடகர் சித்து முஸ் வாலா கொல்லப்பட்டதற்கு முக்கிய குற்றவாளி லாரன்ஸ் பிஷ்னோய் என்பது குறிப்பிடத்தக்கது.

Night
Day