டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை பதவியிலிருந்து நீக்க கோரிய மனு தள்ளுபடி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை பதவியிலிருந்து நீக்கக் கோரிய பொது நல மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. டெல்லி மதுபான கொள்கை வழக்கில், முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த 21ம் தேதி கைது செய்தனர். இந்நிலையில், அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள, அரவிந்த் கெஜ்ரிவால் முதலமைச்சர் பதவியில் நீடிக்க கூடாது என்று சுர்ஜித் சிங் யாதவ் என்பவர் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை இன்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில், கெஜ்ரிவால் பதவியிலிருந்து நீக்கக் கோரிய பொது நல மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

Night
Day