வழக்கில் இருந்து விடுவிக்க கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு - விசாரணை ஒத்திவைப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை வழக்கில் இருந்து விடுவிக்க கோரிய மனு மீதான விசாரணை ஏப்ரல் 4ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள, செந்தில் பாலாஜியை வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கு தொடர்பான சில ஆவணங்களை கோரி வங்கிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், அந்த ஆவணங்கள் தற்போது வரை கிடைக்காததால், விசாரணையை ஏப்ரல் 4 தேதிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

varient
Night
Day