இந்தியா
இஸ்ரேல் தாக்குதலில் 2 இந்திய மாணவர்கள் காயம்
ஈரான் மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் 2 இந்திய மாணவர்கள் காயமடைந்து?...
ஜார்கண்டில் நேற்று நடைபெற்ற அமைச்சரவை விரிவாக்கத்தில் முன்னாள் முதலமைச்சர் ஹேமந்த் சோரனின் சகோதரர் உட்பட 8 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர். நிலமோசடி வழக்கில் அமலாக்கத்துறை கைதைத் தொடர்ந்து ஹேமந்த் சோரன் ராஜினாமா செய்ய புதிய முதலமைச்சராக கடந்த 2-ம் தேதி சம்பாய் சோரன் பதவியேற்றார். அவருடன் காங்கிரசைச் சேர்ந்த ஆலம்கீர் ஆலமும் ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் சத்யானந்த் போக்தாவும் அமைச்சர்களாக பொறுப்பேற்றனர். இந்நிலையில் நேற்று நடைபெற்ற அமைச்சரவை விரிவாக்கத்தில் ஹேமந்த் சோரனின் சகோதரர் பசந்த் சோரன்,காங்கிரசை சேர்ந்த ராமேஷ்வர் ஓரான், பன்னா குப்தா,பதல் பத்ரலேக் உட்பட 8 பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்றனர். ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
ஈரான் மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் 2 இந்திய மாணவர்கள் காயமடைந்து?...
சைப்ரஸ் நாட்டின் நிக்கோசியாவில் உள்ள அதிபர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்வி?...