சிபு சோரனுக்கு குடியரசுத் தலைவர் அஞ்சலி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மறைந்த ஜார்க்கண்ட் முன்னாள் முதலமைச்சர் சிபுசோரன் உடலுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.

உடல் நலக் குறைவால் டெல்லி ஸ்ரீ கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜார்கண்ட் முன்னாள் முதலமைச்சரும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் இணை நிறுவனருமான ஷிபு சோரன் சிகிச்சை பலனின்றி காலமானார். இதனை அறிந்த குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, மருத்துவமனைக்கு நேரில் சென்று சிபுசோரனின் உடலுக்க அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து சிபுசோரனின் மகனும் ஜார்கண்ட் முதலமைச்சருமான ஹேமந்த் சோரனுக்கு குடியரசுத் தலைவர் ஆறுதல் தெரிவித்தார்.

Night
Day