பாகிஸ்தானுக்கு ராணுவ தலைமை தளபதி உபேந்திரா எச்சரிக்கை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை நிறுத்தாவிட்டால், வரைபடத்தில் கூட பாகிஸ்தான் இருக்காது என்று ராணுவ தளபதி உபேந்திரா திவிவேதி எச்சரித்துள்ளார். ராஜஸ்தானின் அனுப்கார்க் நகரில் உள்ள ராணுவ முகாமில் பேசிய அவர், ஆபரேஷன் சிந்தூரின் போது காட்டப்பட்ட கட்டுப்பாடு இனி இருக்காது என்று கூறினார். புவியியல் ரீதியில் இருக்க வேண்டுமா அல்லது வேண்டாமா என சிந்திக்கும் அளவுக்கு இந்திய ராணுவத்தின் அடுத்த நடவடிக்கை இருக்கும் என்று எச்சரித்த உபேந்திரா திவிவேதி, புவியியலில் ஒரு இடத்தில் இருக்க வேண்டும் என பாகிஸ்தான் விரும்பினால், அந்நாடு எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை நிறுத்த வேண்டும் என்று கூறினார். 

Night
Day