கேரளா: குடியிருப்பு வாசிகளை அச்சுறுத்தி வந்த சிறுத்தை பிடிபட்டது

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் குடியிருப்பு பகுதியில் சுற்றித்திரிந்த சிறுத்தையை வனத்துறையினர் கூண்டு வைத்து படித்தனர். கொலுக்கப்பாறை சூரிமலைபகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருந்து வந்தது. அவ்வப்போது குடியிருப்பு பகுதிக்‍கு வந்த சிறுத்தை அங்கு வீடுகளில் வளர்க்‍கப்பட்டு வந்த ஆடு, மாடுகளை வேட்டையாடியது. இதுகுறித்து அப்பகுதி மக்‍கள் வனத்துறையினருக்‍கு தகவல் தெரிவித்ததையடுத்து, அங்கு கூண்டு வைத்து கண்காணிக்‍கப்பட்டு வந்தது. கூண்டில் சிறுத்தை சிக்‍கியதை அடுத்து, வனத்துறையினர் அதனை திருவனந்தபுரம் மிருகக்‍ காட்சி சாலையில் கொண்டு சென்று விட்டனர்.

Night
Day