கெஜ்ரிவால் சர்க்கரை அளவு 350-க்கும் மேல் அதிகரிப்பு : இன்சுலின் செலுத்தி கொண்ட கெஜ்ரிவால்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திகார் சிறையில் இருக்கும் டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவாலுக்கு சர்க்கரை அளவு அதிகரித்ததால் இன்சுலின் செலுத்தி கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த மாதம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். நீரிழிவு நோயாளியான கெஜ்ரிவால், சிறையில் உடல்நலம் பாதிக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், அவரின் சர்க்கரை அளவு 350க்கு மேல் சென்றதால், நேற்று இரவு சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும் வகையில் இன்சுலின் ஊசி போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

varient
Night
Day