யாஷிகா ஆனந்தின் கார் விபத்து வழக்கு மாவட்ட மகிளா நீதிமன்றத்துக்கு மாற்றம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

செங்கல்பட்டு மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நடிகை யாஷிகா ஆனந்தின் கார் விபத்து வழக்கு மாவட்ட மகிளா நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

கடந்த 2021 ஆம் ஆண்டு ஜுலை மாதம் புதுச்சேரியில் இருந்து சென்னை நோக்கி தனது நண்பர்களுடன் நடிகை யாஷிகா ஆனந்த் ஓட்டி வந்த கார் மாமல்லபுரம் அருகே விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த பாவனி செட்டி என்பவர் உயிரிழந்தார். இந்த வழக்கு மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், மகிளா நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்பட்டது. இதனிடையே நடிகை யாஷிகா ஆனந்த், மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் இன்று ஆஜரானார். வழக்கை விசாரித்த மகிளா நீதிமன்ற நீதிபதி, யாஷிகா ஆனந்தை வரும் 3ம் தேதியன்று ஆஜராக உத்தரவிட்டார்.

Night
Day