காங்கிரஸ் தலைவர்கள், தொண்டர்கள் மீது பா.ஜ.க.வினர் தாக்குதல் நடத்தியதாக குற்றச்சாட்டு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

அசாம் மாநிலத்தில் ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ நீதி யாத்திரையில் பா.ஜ.க.வினர் நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இரண்டாம் கட்ட பாரத் ஜோடோ யாத்திரையை மணிப்பூரில் தொடங்கிய ராகுல் காந்தி, தற்போது அசாம் மாநிலத்தில் யாத்திரையை தொடர்ந்து வருகிறார். அசாமின் சோனிட்பூரில் யாத்திரை வாகனம் சென்றபோது காங்கிரசாரின் கூட்டத்தில் பா.ஜ.க.வினரும் நுழைந்தனர். ராகுல் காந்தியை பார்த்து பா.ஜ.க.வினர் ஜெய் ஸ்ரீராம் என கோஷம் எழுப்பிய நிலையில், ராகுல் காந்தி பா.ஜ.க. தொண்டர்களை நோக்கி சென்றார். அப்போது நிலைமையின் விபரீதத்தை உணர்ந்த பாதுகாவலர்கள் மீண்டும் வாகனத்துக்கு ராகுல் காந்தியை அனுப்பி வைத்தனர். அதன் பின்னர் கூட்டத்தில் இருந்த காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் மீது பா.ஜ.க.வினர் தாக்குதல் நடத்தியதாக குற்றம் சாட்டப்படுகிறது.

Night
Day