கனமழை எச்சரிக்கையாக, கேரளாவில் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கேரளாவில் கனமழை எச்சரிக்கை காரணமாக 5 மாவட்டங்களில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, திருச்சூர், இடுக்கி, எர்ணாகுளம், வயநாடு மற்றும் காசர்கோடு மாவட்டங்களில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழை எச்சரிக்கை காரணமாக இந்திய வானிலை ஆய்வு மையம் 11 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கையும், 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும் விடுத்துள்ள நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த விடுமுறையானது அங்கன்வாடிகள், நர்சரிகள், கேந்திரிய வித்யாலயாக்கள், சிபிஎஸ்இ பள்ளிகள் மற்றும் மதரஸாக்கள் என அனைத்திற்கும் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Night
Day