குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை நீட்டிப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக பெரும்பாலான அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

தென்காசி மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் இரவு முழுவதும் கொட்டித் தீர்த்த கனமழை காரணமாக குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால், குற்றால மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவி, சிற்றருவி, புலியருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. எனவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுற்றுலா பயணிகள் குளிக்க 2-வது நாளாக தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

Night
Day