நீலகிரியை மிரட்டும் கனமழை - இயல்பு வாழ்க்கை முடக்கம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களுக்கு அதிகனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில், பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. 

நீலகிரி மாவட்டத்தில் உதகை, குந்தா, கூடலூர், பந்தலூர் ஆகிய பகுதிகளில் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் அவலாஞ்சியில் மட்டும் அதிகபட்சமாக 35 புள்ளி 3 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இதேபோன்று, அப்பர் பவானியில் 30 சென்டி மீட்டரும், எமரால்டு பகுதியில் 18 புள்ளி 2 சென்டி மீட்டரும், கூடலூரில்  15 புள்ளி 3 சென்டி மீட்டரும் மழை பதிவாகியுள்ளது. தொடர் மழை காரணமாக, நீலகிரி மாவட்டத்தில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

Night
Day