உத்தரப்பிரதேசம் : லிப்டில் சிறுமியை கடித்த வளர்ப்பு நாய்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டா அருகே லிப்டில் சிறுமியை கடித்த வளர்ப்பு நாயின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.

நொய்டாவில் உள்ள வீட்டு வசதி வாரியத்துக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பில், லிப்டில் பயணித்த சிறுமியை, வளர்ப்பு நாய் ஒன்று கடித்து குதறியது. இதில் கையில் பலத்த காயமடைந்த சிறுமியின் அலறல் சத்தம்கேட்டு, உடனடியாக அங்கு வந்த நபர் ஒருவர் அந்த நாயை தாக்கி லிப்டில் இருந்து வெளியேற்றி உள்ளார். அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான இக்காட்சி தற்போது வெளியாகி காண்போரை அதிர்ச்சியடைய செய்துள்ளது. 

Night
Day