உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவியேற்றார் சஞ்சீவ் கண்ணா

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

உச்சநீதிமன்றத்தின் 51-வது தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கண்ணா இன்று பதவியேற்றுக்கொண்டார்.

உச்சநீதிமன்றத்தின் 50-வது தலைமை நீதிபதியாக கடந்த 2022-ஆம் ஆண்டு நவம்பர் 9-ஆம் தேதி முதல் பதவி வகித்து வந்த டி.ஒய்.சந்திரசூட் நேற்றுடன்  ஓய்வுபெற்றார். இதனைத் தொடர்ந்து, மூத்த நீதிபதியான சஞ்சீவ் கண்ணாவை அடுத்த தலைமை நீதிபதியாக நியமிக்க ஏற்கனவே பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. அதை ஏற்று, புதிய தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கண்ணாவை கடந்த மாதம் 24-ந் தேதி மத்திய அரசு நியமித்தது.

இந்நிலையில், உச்சநீதிமன்றத்தில் 51-வது தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கண்ணா இன்று பதவியேற்றுக்கொண்டார். குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற விழாவில், சஞ்சீவ் கண்ணாவுக்கு, குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். 

varient
Night
Day