அகமதாபாத் விமான விபத்து- 99 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டன

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தவர்களில் இதுவரை 99 பேரின் உடல்கள் டிஎன்ஏ சோதனை மூலம் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், 64 உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமகதாபாத் பொது மருத்துவமனையின் கூடுதல் மருத்துவ கண்காணிப்பாளர் ரஜ்னிஸ் படேல், அடையாளம் காணும் செயல்முறை இன்னும் முடிவடையவில்லை என்றும் டிஎன்ஏ பரிசோதனை முடிவுகள் வந்தவுடன் மீதம் உள்ள உடல்களும் ஒப்படைக்கப்படும் என குறிப்பிட்டார். இதனிடையே உடல்கள் ஒப்படைப்பு செயல்முறைகளை கவனமாகவும் மரியாதையுடனும் கையாளப்படுவதை உறுதி செய்வதற்காக, இறந்த ஒவ்வொரு நபருக்கும் மாநில அரசு தனிக்குழுவை நியமித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Night
Day