"உலக பொருளாதார அரங்கில் இந்தியாவின் உயர்வுக்கு பிரதமர் மோடியே காரணம்" - ஆளுநர் ஆர்.என்.ரவி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பூகம்பம் உள்ளிட்ட இயற்கை சீற்றங்களின் போது குஜராத்தை வழி நடத்தியதை போன்று தற்போது நாட்டை பிரதமர் மோடி வழி நடத்துவதாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பெருமிதம் தெரிவித்துள்ளார். சென்னை எழும்பூரில் உள்ள அருங்காட்சியக அரங்கத்தில் குஜராத் உருவான நாள் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தமிழக ஆளுநர் ரவி உரையாற்றினார். அப்போது அவர், இந்தியாவின் விடுதலைப் போராட்டத்தில் குஜராத் மாநிலம் செய்த வரலாற்று பங்களிப்பையும், தற்போதைய தேச வளர்ச்சியில் அதன் பங்கையும் பாராட்டினார். உலக பொருளாதார அரங்கில் இந்தியாவின் உயர்வுக்கு பிரதமர் மோடியே காரணம் என்றும் ஆளுநர் ரவி குறிப்பிட்டார்.

Night
Day