வைகாசி விசாகம் - பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் தமிழக ஆளுநர் சாமி தரிசனம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

வைகாசி விசாக பெருவிழாவை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டம் சிறுவாபுரியில் உள்ள பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி சாமி தரிசனம் செய்தார்.

முன்னதாக கோவிலுக்க வருகை தந்த ஆளுனரை திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரதாப் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். ஆலய நிர்வாகம் சார்பில் ஆளுநருக்கு மேள தாளம் முழங்க பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. தொடர்ந்து ஆலய வளாகத்தில் உள்ள விநாயகர், மூலவர் பாலசுப்ரமணியர், வள்ளி - மணவாளன், ஆதிமூலவர், பைரவர், கொடி மரத்தை ஆளுநர் ரவி வழிபட்டார். அப்போது ஆலய நிர்வாகம் சார்பில் ஆளுநருக்கு மாலை அணிவித்து சிறப்பு பிரசாதம் வழங்கப்பட்டது. 

varient
Night
Day