திருப்பூர் அருள்மிகு ஸ்ரீ ஐயப்ப சுவாமி ஆலய அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் நகரில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ ஐயப்ப சுவாமி ஆலயத்தின் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடைபெற்றது. யாகசாலையில் பூஜை செய்யப்பட்ட புனித நீர் விமான கோபுரத்திற்கு ஊற்றப்பட்டு குடமுழுக்‍கு நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து ஐயப்பனுக்‍கு மகா கும்பாபிஷேகம் செய்யப்பட்டு கற்பூர ஆரத்தி காண்பிக்‍கப்பட்டது. இதனையடுத்து சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த ஐயப்பனை திரளான பக்‍தர்கள் கண்டு தரிசனம் செய்தனர்.

varient
Night
Day