திருப்பதி மலையில் சாமி தரிசன வரிசைகளில் அலைமோதும் கூட்டம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

வார இறுதி விடுமுறை நாட்களை முன்னிட்டு, திருப்பதி ஏழு மலையான் கோவிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்து சாமி தரிசன வரிசைகளில் கூட்டம் அலைமோதியது. இதன் காரணமாக டோக்கன்கள் இல்லாமல் இலவச தரிசனத்திற்காக திருப்பதி மலைக்கு சென்ற பக்தர்கள் சுமார் 4 கிலோ மீட்டர் தூரத்துக்கு வரிசையில் காத்திருக்கின்றனர். பக்தர்கள் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்து உள்ள காரணத்தால் திருப்பதி மலையில் தங்கும் அறைகளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. பக்தர்கள் கூட்டம் மேலும் அதிகரிக்கும் என்பதால், வரிசையில் காத்திருக்கும் பக்தர்களுக்கு தேவையான உணவு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை தேவைகளை தேவஸ்தான நிர்வாகம் செய்து கொடுத்து வருகிறது.

Night
Day