திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்த நடிகர் தனுஷ்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நடிகர் தனுஷ் திருப்பதியில்  ஏழுமலையானை தரிசனம் செய்தார்.  தனுஷ் நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு நேற்று முன்தினம் திருப்பதியில் நடைபெற்றது.

போக்குவரத்து இடையூறு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் படப்பிடிப்பிற்கு அளிக்கப்பட்ட அனுமதியை போலீசார் ரத்து செய்தனர்.  இந்த நிலையில் தனுஷ் திருப்பதி கோவிலில் ஏழுமலையானை வழிபட்டார்.  தரிசனத்திற்கு பின் அவருக்கு தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்டன. தனுஷிடம் பேட்டி எடுக்க வந்த செய்தியாளர்களை தனுஷின் பவுன்சர்கள் தடுத்து நிறுத்தியதால் இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. 

varient
Night
Day