தொடர் விடுமுறை - திருநள்ளாறில் ஸ்ரீ தர்ப்பாரண்யேஸ்வரர் ஆலயத்தில் திரளான பக்தர்கள் வருகை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தொடர் விடுமுறையை முன்னிட்டு காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறில் உலக பிரசித்தி பெற்ற ஸ்ரீ தர்ப்பாரண்யேஸ்வரர் ஆலயத்தில் திரளான பக்தர்கள் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

ஸ்ரீதர்ப்பாரண்யேஸ்வரர் தேவஸ்தானம் ஸ்ரீ சனீஸ்வர பகவான் ஆலயத்திற்கு சனிக்கிழமையையொட்டி பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தந்தனர். சனீஸ்வர பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு வெள்ளி கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். முன்னதாக பக்தர்கள் கோவில் அருகே உள்ள நளன் தீர்த்தகுளத்தில் புனிதநீராடி எள் தீபம் ஏற்றி நீண்ட வரிசையில் காத்திருந்து சனிபகவானை வழிபட்டு வேண்டுதல் செய்தனர். 

Night
Day