ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி 7 ஆம் நாள் பகல்பத்து உற்சவம்

எழுத்தின் அளவு: அ+ அ-

திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி பகல் பத்து நிகழ்ச்சியின் 7ம் நாள் உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது. 

பூலோக வைகுண்டம் என பக்தர்களால் போற்றி வணங்கப்படும் ஸ்ரீரங்கம் அருள்மிகு ரங்கநாதர் ஆலயத்தின் முக்கிய நிகழ்வான வைகுண்ட ஏகாதசி விழா கடந்த 19ம் தேதி திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கியது. இதையடுத்து 20ம் தேதி முதல் பகல்பத்து உற்சவம் நடைபெற்று வருகிறது. பகல்பத்து உற்சவத்தின் 7ம் நாளான இன்று காலை நம்பெருமாள் நம்பெருமாள் ஆண்டாள் முத்துக்கொண்டை அணிந்து, வைரக்கல், பவளமாலை, முத்துமாலை உள்ளிட்ட ஆபரணங்கள் சூடி தங்க பல்லக்கில் உள்பிரகாரங்களில் வலம் வந்து அர்ஜூன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். பக்தி பரவசத்தில் ரெங்கா.... ரெங்கா... என முழக்கம் எழுப்பி மனமுருக பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். பகல்பத்து வைபவத்தின் 10ம் நாள் உற்சவத்தில் மோகினி அலங்காரத்தில் நம்பெருமாள் காட்சி அளிப்பார். 

Night
Day