திருச்செந்தூர் குடமுழுக்கு - தமிழக அரசுக்கு உத்தரவு

எழுத்தின் அளவு: அ+ அ-

திருச்செந்தூர் முருகன் கோவிலின் குடமுழுக்கு விழாவை தமிழ் மொழியில் நடத்த உத்தரவிட கோரிய மனு மீது தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.

வரும் ஜூலை 7-ம் தேதி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலின் குடமுழுக்கு நடைபெற உள்ளது. இவ்விழாவை தமிழ் மொழியில் மந்திரங்களை ஓதி நடத்தக் கோரி தாக்கல் செய்யப்பட்டிருந்த மனு நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம் - மரிய கிளாட் அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, குடமுழுக்கு நிகழ்வுகள் முழுமையும் தமிழிலேயே நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை அறிக்கையாக தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், இது தொடர்பாக நிலுவையில் உள்ள வழக்குகளோடு இதனை பட்டியலிட ஆணையிட்டனர்.

Night
Day