சபரிமலையில் மகரவிளக்கு பூஜை காலம் நாளையுடன் நிறைவு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடப்பு ஆண்டுக்கான மகரவிளக்கு பூஜை காலம் நாளையுடன் நிறைவு பெறுவதாகவும் இன்று இரவு 10 மணி வரை மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என திருவிதாங்கூா் தேவஸம் போர்டு தெரிவித்துள்ளது. சபரிமலையில் மண்டல பூஜைக்குப்பிறகு, மகர விளக்கு பூஜைக்காக கடந்த டிசம்பர் 30-ம் தேதி நடைதிறக்கப்பட்டது. ஜனவரி 15- ஜோதி தரிசனம் முடிந்ததைத் தொடர்ந்து நேற்றுடன் நெய்யபிஷேகம் நிறைவடைந்தது. இந்தநிலையில் நாளை காலை பந்தளம் மன்னரின் பிரதிநிதி ஐயப்பனை தரிசனம் செய்து ஹரிவராசனம் பாடிய பின்னா் கோயில் நடை அடைக்கப்படும் என்றும் தொடர்ந்து சன்னிதானம் செல்லும் பாதைகள் அனைத்தும் மூடப்படும் என்றும் தேவஸம் போர்டு  தெரிவித்துள்ளது.

Night
Day