சதுரகிரி கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

விருதுநகர் மாவட்டம் சதுரகிரி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு 4 நாட்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு பிரதோஷம் மற்றும் பவுர்ணமியையொட்டி பக்தர்கள்  சாமி தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில், தைமாத பிரதோஷம் மற்றும் பௌர்ணமியை முன்னிட்டு வரும் 23ம் தேதி முதல் 26ம் தேதி வரை 4 நாட்களுக்கு பக்தர்கள் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தொடர் மழை காரணமாக கடந்த 2 மாதங்களாக பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 

Night
Day