8 விக்கெட் வித்தியாசத்தில் சென்னையை வீழ்த்திய லக்னோ

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஐபிஎல் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் சென்னையை வீழ்த்தி லக்னோ அணி தனது 4ஆவது வெற்றியை பதிவுசெய்தது.

நேற்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் -  சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற லக்னோ அணி முதல் பந்துவீச, சென்னை அணி தொடக்கம் முதலே தடுமாறியது. ரச்சின் ரவீந்திரா ரன் ஏதும் எடுக்காமல் அவுட் ஆக, அடுத்தடுத்து களமிறங்கிய ஷிவம் துபே 3 ரன் மற்றும் சமீர் ரிஸ்வி 1 ரன்னில் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தனர். இறுதியில் களம் கண்ட தோனி, 9 பந்துகளில் 2 சிக்ஸர் மற்றும் 3 பவுண்டரிகளை விளாசி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்கள் குவித்தது, சென்னை அணி. இதனை தொடர்ந்து லக்னோ அணியில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய குயின்டன் டி காக் மற்றும் கேப்டன் கே.எல். ராகுல் இருவரும் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர். இந்நிலையில் 19 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு லக்னோ அணி 180 ரன்கள் எடுத்து சென்னை அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. 

Night
Day