விளையாட்டு துறையில் 7 பேருக்கு பத்ம ஸ்ரீ விருதுகள் அறிவிப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

டென்னிஸ் இரட்டையர் பிரிவில் முதலிடம் பிடித்த ரோகன் போபண்ணாவுக்கு பத்ம ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் 75வது குடியரசு தினத்தையொட்டி இந்தியாவில் பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பல்வேறு பிரிவுகள் மற்றும் துறைகளில் சிறப்பாக பணியாற்றுவோருக்கு பத்ம விருதுகள் வழங்கப்படுகின்றன. அந்த வகையில், விளையாட்டு துறையில் 7 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் 43 வயதில் டென்னிஸ் இரட்டையர் தரவரிசையில் முதலிடம் பிடித்த ரோகன் போபண்ணா, தமிழகத்தை சேர்ந்த ஸ்குவாஷ் வீராங்கனை ஜோஸ்னா சின்னப்பா, மல்லர்கம்ப பயிற்சியாளர் உதய் விஷ்வநாத் தேஷ்பாண்டே, வில்வித்தை பயிற்சியாளர் பூர்ணிமா மஹட்டோ உள்ளிட்டோருக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 

Night
Day