9 நாட்களுக்கு பிறகு கடலுக்கு சென்ற ராமேஸ்வரம் மீனவர்கள்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

இலங்கை அரசை கண்டித்து நடைபெற்ற போராட்டம் வாபஸ் பெறப்பட்டதையடுத்து, 9 நாட்களுக்கு நாட்களுக்கு பிறகு ராமேஸ்வரம் மீனவர்கள் கடலுக்கு சென்றனர். ராமேஸ்வரத்தில் இருந்து கடலுக்கு சென்ற 5 மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி, இலங்கை அரசு சிறை தண்டனை விதித்தது. இந்நிலையில் யாழ்ப்பாணம் சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்க கோரி, ராமேஸ்வர மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இலங்கை அரசிடம் இந்திய தூதரக அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து, போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. இதை தொடர்ந்து 9 நாட்களுக்கு பிறகு ராமேஸ்வரம் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

varient
Night
Day