4 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, நீலகிரி ஆகிய 4 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தெற்கு கடலோர ஆந்திரா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாகவும், தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு கேரளா கடலோர பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன்காரணமாக தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, நீலகிரி ஆகிய 4 மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யக்கூடும் என்பதால் அந்த மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு, தேனி, நெல்லை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் குறிப்பிட்டு உள்ளது.

Night
Day