14 சீட், ஒரு ராஜ்யசபா பதவி தேமுதிக தலைமையின் விருப்பம் அல்ல

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நாடாளுமன்ற தேர்தலில், 14 சீட்கள் மற்றும் ஒரு மாநிலங்களவை பதவி என்பது தேமுதிக தலைமையின் விருப்பம் அல்ல, அது மாவட்ட செயலாளர்கள் தெரிவித்த கருத்து மட்டுமே என அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.  தேமுதிகவின் 24ம் ஆண்டு கொடி நாளையொட்டி, சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில், பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கொடி ஏற்றி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கூட்டணிக்கு தலைமை வகித்து வரும் கட்சிகள், பேச்சுவார்த்தைக்கு அழைத்தால் தேமுதிக தயாராகவுள்ளதாக தெரிவித்தார். 

Night
Day