வீட்டில் வைத்து விற்பனை செய்த கெட்டுப்போன 110 கிலோ இறைச்சி பறிமுதல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தூத்துக்குடியில் வீட்டில் வைத்திருந்த கெட்டுப்போன 110 கிலோ மாட்டு இறைச்சியை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து அழித்தனர். அண்ணா நகர் பகுதியில் உள்ள வீட்டில் உரிய அனுமதியின்றி இறைச்சி விற்பனை செய்வதாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு புகார் வந்தது. இதைத்தொடர்ந்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியதில் வீட்டில் வைத்திருந்த கெட்டுப்போன 110 கிலோ மாட்டு இறைச்சியை அதிகாரிகள் பறிமுதல் செய்து அழித்தனர். மேலும் இறைச்சி விற்பனை செய்ததற்காக அபராதம் விதித்த அதிகாரிகள், வீட்டில் இறைச்சி விற்பனை செய்ய தடை விதித்து நோட்டீஸ் வழங்கினர். 

Night
Day