விலை உயர்ந்த பைக்கை குறி வைத்து திருட்டு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் விலையுர்ந்த இருசக்கர வாகனத்தை மட்டும் குறி வைத்து மர்மநபர்கள் திருடி செல்லும்  சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. 

வடகரை பகுதியைச் சேர்ந்த ரபீக் ராஜா என்பவர் பழைய இரும்பு கடை வைத்து தொழில் செய்து வருகிறார். இந்நிலையில், இவர் கடந்த 18 ஆம் தேதி தனது கடை முன் நிறுத்தி வைத்திருந்த விலையுர்ந்த 2 இருசக்கர வாகனத்தை மட்டும் மர்மநபர்கள் திருடி சென்றுள்ளனர்.  இதுகுறித்து, ரபீக் ராஜா காவல்நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், போலீசார் கொள்ளையர்களை தேடி வருகின்றனர். தொடர்ந்து காவல்துறையினர் இரவு ரோந்து பணியை தீவிர படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில், இருசக்கர வாகனத்தை மர்மநபர்கள் தள்ளிக்கொண்டே திருடும் செல்லும் காட்சி வெளியாகியுள்ளது.  

Night
Day