மீனவரின் வலையில் சிக்கிய 1.8 கிலோ எடைகொண்ட புலாசா மீன்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-


புதுச்சேரியில் மீனவர் வலையில் சிக்கிய புலாசா மீன் 23 ஆயிரத்திற்கு ஏலம் போனதால் மீனவர் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 

புதுச்சேரியின் ஏனாம் பகுதியில், அதிகமாக மீன்பிடி தொழில் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், கெளதமி ஆற்றில் மீனவர் மல்லாடி பிரசாத் என்பவர் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்போது, வலையில், அப்பகுதியில் மீன்களின் ராஜா என அழைக்கப்படும் 1.8 கிலோ எடை கொண்ட புலாசா மீன் சிக்கியது. இந்த மீன் ரூ. 23 ஆயிரத்திற்கு ஏலம் போனதால் மீனவர்  மகிழ்ச்சியடைந்துள்ளர். 

Night
Day