விருதுநகர்: அரசு மருத்துவமனை ஊழியர் லஞ்சம் பெற்ற வீடியோ வெளியானது

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனை ஊழியர், நோயாளியின் உறவினரிடம் லஞ்சம் பெற்ற வீடியோ வெளியாகி உள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்து செல்லும் பொதுமக்களிடம் ஊழியர்கள் லஞ்சம் கேட்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனிடையே பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டுள்ள பெண்ணின் உறவினர்களிடம், மாரிக்கனி என்ற ஊழியர் 100 ரூபாய் பணத்தை லஞ்சமாக பெற்ற  வீடியோ வெளியாகியுள்ளது. ஊழியர்கள் பணம் கேட்டு தொந்தரவு செய்வதாகவும், இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Night
Day