விருதுநகர்: அரசுப் பேருந்து பயணிக்கு ரூ.80 மீதம் திருப்பிக் கொடுக்காத புகார்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

விருதுநகரில் அரசுப் பேருந்தில் பயணித்தவரிடம் 80 ரூபாய் மீதி தொகையை திரும்பித் தராத புகாரில், 8 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2019-ம் ஆண்டு சாத்தூரில் இருந்து விருதுநகர் நோக்கி சென்ற அரசு பேருந்தில் ஜெயபாரதி என்பவர் பயணம் செய்துள்ளார். பயணச்சீட்டு கட்டணமான 22 ரூபாய்க்கு 102 ரூபாய் கொடுத்தும், நடத்துனர் மீதி தொகையான 80 ரூபாயை திருப்பித் தரவில்லை எனக்கூறி, விருதுநகர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் புகாரளித்தார். புகாரை விசாரித்த நீதிபதி, அரசுப் பேருந்து நடத்துனர் எட்வின் மற்றும் மண்டல மேலாளர் ஆகியோர் பாதிக்கப்பட்ட பயணிக்கு 80 ரூபாயை திருப்பித் தர உத்தரவிட்டார். மேலும், மன உளைச்சலை ஏற்படுத்தியதற்காக 5 ஆயிரம் ரூபாயும், வழக்கு செலவு தொகை 3 ஆயிரம் ரூபாயும் வழங்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.

Night
Day